Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
ம
| மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம். |
| மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. |
| மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? |
| மண்டையுள்ள வரை சளி போகாது. |
| மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். |
| மத்தளத்திற்கு இரு புறமும் இடி. |
| மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல். |
| மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு. |
| மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். |
| மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான். |
| மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். |
| மருந்தும் விருந்தும் மூன்று வேளை. |
| மருந்தே ஆயினும் விருந்தோடு உண். |
| மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும். |
| மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா? |
| மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும். |
| மவுனம் கலக நாசம். |
| மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும். |
| மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. |
| மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே. |
| மனமுரண்டிற்கு மருந்தில்லை. |
| மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. |
| மனம் உண்டானால் வழி உண்டு. |
| மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. |
| மனம் போல வாழ்வு. |
| மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி. |
| மண்னுயிரைத் தன்னுயிர்போல் நினை. |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


