Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
ந
| நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா? |
| நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி. |
| நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை. |
| நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா! |
| நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது. |
| நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும். |
| நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும். |
| நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான். |
| நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? |
| நயத்திலாகிறது பயத்திலாகாது. |
| நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும். |
| நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். |
| நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை. |
| நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும். |
| நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது. |
| நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ? |
| நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும். |
| நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். |
| நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம். |
| நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை. |
| நன்மை கடைப்பிடி. |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


