Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
கோ
| கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை. |
| கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு. |
| கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது. |
| கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு. |
| கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. |
| கோபம் சண்டாளம். |
| கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா? |
| கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா? |
| கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? |
| கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் |
| கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும். |
| கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும். |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


