Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
சு
| சுக துக்கம் சுழல் சக்கரம். |
| சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். |
| சுட்ட சட்டி அறியுமா சுவை? |
| சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது. |
| சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா? |
| சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம். |
| சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும். |
| சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு. |
| சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே. |
| சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. |
| சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. |
| சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா? |
| சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும். |
| சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான். |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


